Wednesday 11 September 2019

கூந்தலுக்கு இயற்கையிலேயே உள்ளது அழகா? மணமா??


‘கொங்குதேர் வாழ்க்கையின்’ ஐயத்திற்கு தீர்வு :-

• ’பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா , இல்லையா ?’ -என்னும் கேள்வியா உள்ளது அங்கு ?? .
• கேட்கப் பட்டிருப்பது கூந்தலின் ‘அழகு / புத்துணர்ச்சி’ பற்றியக் கேள்விதான் என்பதற்கான விளக்கம் …..

2, இறையனார், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது
கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது* மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின் மயில்இயல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீஅறியும் பூவே

புரிதல்:
1) *கண்டதைச் சொல்வாயா? என்னும் வேண்டுதலின் மூலம், எதிர்பார்ப்பு ’வாசம்,மணம்’ சம்பந்தப்பட்டது இல்லை என்பதும், ’ தோற்றம், புத்துணர்ச்சி ( fressness)’ பற்றியக் கேள்வியது என்பதும் உறுதியாகிறது.
2) மயில்இயல் , செறிஎயிற்று – போன்ற பெண்ணின் இயல்புப் பற்றியக் குறிப்புகள் (மயில் சாயல் கொண்டவள், நெருங்கிய பல் உள்ளவள் - என்று ) உருவ அமைப்பாகத் தவறாககக் கணிக்கப் பட்டுள்ளது . (பல் நெருக்கம், அளவை வைத்து விலங்குகளின் பருவம்/வயதைக் கணிக்கும் வழக்கம் தான் நடைமுறையில் உள்ளது) .
3) கருப்புக் கூந்தலைவிடவும் அழகிய வண்ண மலர்களைக் கண்டிருக்கிறாயா ? என்னும் பெருமைதான் கேள்வியில் புலப்படுகிறது

விளக்கம் : 1
துரைப்பார்வையில் விளக்கப்பா :

.தேனைத்தேர்ந்து உண்ணும் அழகுஇறகு ஆண்வண்டே ,
உன்விருப்பம் சொல்லாமல் கண்டதை*ச்சொல் வாயா!
#அயல்போல் நடித்து1 மயில்போல் மிகநெருங்கி2
பல்போல் உரசும்3இளம்# பெண்கருங் கூந்தலின்
புத்துணர்ச்சி * உண்டோநீ கண்டவண்ணப் பூக்களிலே!!

எடுத்தாளப்பட்டச் சொற்பொருள் :

கொங்கு :-தேன் பூந்தாது வாசனை கள் புறத்தோல் கருஞ்சுரை /கோயமுத்தூர் சேலம் ஜில்லாக் களும் மைசூர்ச்சீமையின் ஒரு பகுதியுமாக அடங்கிய தமிழ்நாடு/
தேர் - இரதம் வண்டி கானல் தேர், தேர்ந்தெடு, அறிந்துகொள், பயில், ( தேர் காடு நந்தவனம் வாசனை பேதை வானம்பாடி இசைப்பாட்டு )
அம் - அழகு நீர் நோக்கம் எச்சம் நலம் கொடுமை சிரிப்பு அன்னம் அழைப்பு போர் அம்பு ஆணை தீர்க்கம்
சிறை - காவல் சிறைச்சாலை அடிமைத்தனம் சிறைப்பிடிக்கப்பட்டஇளம்பெண் அணை இறகு பாத்தி நீர்நிலை மதகுகள் கரை இடம் பக்கம்
தும்பி – யானை வண்டு ஆண்வண்டு Dragon-fly கடல்மீன்வகை காட்டத்திமரம் கரும்பு Wickedwomanதுஷ்டை
காமம்:- விருப்பம் புணர்ச்சியின்பம் காமநீர் Tax; இறை விரும்பியபொருள் ஊர் குடி
பயில் :-பழக்கம் சொல் சைகை(Secret language)
கெழி :-நட்பு
கெழீஇயிலி :- பகைவன்
செறி :- சேர் நெருக்கம் செறிவு கல புணர்
நறி :-குளிர் மணம் நாற்றம் / வெண்மை(வெள்ளைநிறம் ஒளி இளமை மனக்கவடின்மை அறிவின்மை)
விளக்கவுரை :
(பூவின் மணம் மூலம் ஈர்க்கப்பட்டு, தேடிவந்து) தேனைத்தேர்ந்து உண்ணும் அழகுஇறகு ஆண்வண்டே , (முகர்ந்து உணர்ந்த, நுகர்ந்து அறிந்த) உன்விருப்பத்தைச் சொல்லாமல், (உன் கண்ணால்) கண்டு ரசித்ததை*ச் சொல்வாயா! அயல்போல் (விலகி இருப்பதுபோல்) நடித்து, மயில்போல் மிகநெருங்கி, பல்போல் (தொட்டு)உரசும் இளம்பெண்ணின் கருங்கூந்தலின் (பொங்கும் அழகு / ) புத்துணர்ச்சி* (போல் ஏதேனும் )உண்டோநீ கண்டவண்ணப் பூக்களிலே!!

@@@@@@@@@@@@@@@@@

விளக்கம் : 2
தமிழ் இணையக் கல்விக்கழகம்:
முதற்குறிப்பு :- இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக் கூடி, தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது. - இறையனார்.
விளக்கம் :- பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும், உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், நீ கண்கூடாக அறிந்த தையே சொல்வாயாக: எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும், நெருங்கிய பற்களையும் உடைய, இவ்வரிவையின் கூந்தலைப் போல, நறுமண முடைய பூக்களும் நீ அறியும் மலர்களுள், உள்ளனவோ?
@@@@@@@@@@@@@@@@@


வேண்டுகோள் :
விளக்கம் : 1, விளக்கம் : 2 – இரண்டிலும் உள்ள மெய்ப்பொருளை ஆராய்ந்து, எளிய, சரியான மூலத்திற்கு நெருக்கமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்..

No comments:

Post a Comment