Friday 13 September 2019

குற்றம் குற்றமே - 2 : குறுந்தொகையில் (மறைக்கப்பட்ட) பிளமிங்கோ...!


இந்த இழையின் நோக்கம் :

· ..மறைந்திருக்கும் ஒருபறவையின் (பிளமிங்கோ) வாழ்வியலை வெளிப்படுத்துதல்
..கூடு அமைந்திருக்கும் இடம் மரக்கிளையா, மண்தரையா என்று உறுதி செய்தல்.
· ..இப்’பா’வின் திணையை மறுசீராய்வு செய்தல்



160, குறிஞ்சித் திணை :- தலைவி – தோழி
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியில் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநம் காதலர் வரைவே


விளக்கம் : 1

தமிழ் இணையக் கல்விக்கழகம்:
முதற்குறிப்பு :- வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, ''வரைவர்'' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன்.

விளக்கம் :-
தோழி, நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில், இறாமீனை ஒத்த வளைந்த அலகையுடைய பெண் அன்றிலோடு, தடா மரத்தினது உயர்ந்த கிளையின் கண்ணுள்ள கூட்டினிடத்தேயிருந்து, ஒலிக்கின்றசெறிந்த இடையிரவையுடைய, பெரிய தண்மையையுடைய வாடைக் காற்று வீசும் கூதிர்க் காலத்திலும், தலைவர் வந்தாரிலர்; நம் தலைவர் என்னை மணந்து கொள்வது, இதுதானோ?

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஆய்வு

எடுத்தாளப்பட்டச் சொற்பொருள் :

1) அன்றில் – (அன்றி + இல் = அன்றில்..) : காதல்பறவை, நாரை.

· (பொது)நாரை - வெள்ளை, பழுப்பு, கருப்பு வண்ணம் கொண்டிருக்கும் [அரிவாள் மூக்கன் குடும்பம் / பனங்கிழங்கைப் பிழந்தது போல அலகு இருக்கும். நெய்தல் நிலத்தில் , கடலோர மரக் கொம்புகளில் கூடுகட்டி வாழும்].




· (பூநாரை) பிளமிங்கோ – வெள்ளை, சிவப்புக் கலந்த தெளித்தாற்போல செந்நிறம் கொண்டிருக்கும் .[ இறால்மீன் போல அலகு வளைந்து இருக்கும் . . நெய்தல் நிலத்தில் , தரையில் மண்வைத்து வட்டக் கூடுகட்டி வாழும்



· தடவு – பகுதி வளைவு சிறைச்சாலை ஓமகுண்டம் மரவகை ( தடா மரம் என்று பொருள்கொள்ளப் பட்டுள்ளது ) / பூசு வருடு


ஓங்குதல் - உயர்தல் பரவுதல் வளர்தல் பெருமையுறுதல் vomit; சத்திசெய்தல் உயர்த்துதல்

· சினை - மரக்கிளை மூங்கில் சூல் முட்டை உறுப்பு தோன்று கரு குண்டாகு புத்தன்

· கட்சி – காடு புகலிடம் கூடு பிரிவு போர்க்களம் சரீரம் பங்கு வழி


· வரைவு - எல்லை பொதுமகள் வரைதல் தொழில்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சில புரிதல்கள் :

முன்னோர் விளக்கத்தில் -- செந்தலை, இறால்மீன் போல் அலகு என்னும் குறிப்புகளைக் கவனிக்காமல், பொதுவான நாரை இனம் எனக் கணித்து , (அதனால் தடம்மாறி), கூடு மரத்தில் இருப்பதாக உரை தரப்பட்டுள்ளது. அதன்மூலம், காத்திருத்தலுக்கு இலக்கணமான பிளமிங்கோவின் தரையில் கூடுகட்டி வாழும் வாழ்வியல் முறை பதியப்படாமல் விடுப்பட்டுப் போயிருக்கிறது .

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



திணை பற்றியச் சீராய்வு:

n நிகழும் காலம் - குறிஞ்சியின் ’சிறுபொழுது / சாமம்’

n நிகழும் களம் – நெய்தலின் ’கடற்கரை / உப்பங்கழி’

n உரிப்பொருள்/ உணர்ச்சி - நெய்தலின் ’ஏங்குதல்’ / முல்லையின் ’காத்திருத்தல்’



எனவே இப்பாவில் குறிஞ்சி, நெய்தல், முல்லை என மூன்று திணைகளும் அடங்கும் எனக் கொள்வதே பொருத்தமாக அமையும் .



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


விளக்கம் : 2

<b>துரைப்பார்வையில் விளக்கப்பா :

._நெருப்பினைப் போல்சிவந்த செந்தலைப்பூ நாரை *,
இறால்மீன்போல் வாய்வளைந்தப் பெட்டைஅடை காத்திருக்கும்*,
ஓமகுண்டம் போலிருக்கும் கூட்டருகில் நின்றுஏங்கி,
>கேட்கும் பிரிந்தோரைத் தூண்டும்< வகைக்கூவும் _ நீள்இரவின் வாடைமிகும் வேளையிலும் வாரார்! இதுதானோ தோழி,நம் காதலரின் ஆக்கமே!!



குறிப்பு : * பூநாரை - பிளமிங்கோ- (கோடியக்கரை)உப்பங்கழியின் கரையில் (ஓமகுண்டம் போலக்) கட்டும் சிறுமண்கூட்டில், ஒருபறவை மட்டுமே (பெரும்பாலும் பெண்) அடைகாக்கும், மற்றது வெளியே தனித்து,ஏங்கிக் காத்து நின்றிருக்கும்.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வேண்டுகோள் :
விளக்கம் : 1, விளக்கம் : 2 – இரண்டிலும் உள்ள மெய்ப்பொருளை ஆராய்ந்து, எளிய, சரியான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுகிறேன்..



தொடரும் -----

No comments:

Post a Comment